வரும் நவம்பர் மாதம் 1-ந் தேதி நடைபெற உள்ள உலக புகழ்பெற்ற அருள்மிகு நாமக்கல் ஆஞ்சிநேயர் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவின் முகூர்தகால் ஊன்றும் நிகழ்வு இன்று ஞாயிறு நடைபெற்றது

நாமக்கல்

நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமி கோவில் நகரின் மையப்பகுதியில் உள்ளது இங்கு 18 அடி உயர பிரம்மாண்ட ஆஞ்சநேயர் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார் இங்கு கடைசியாக 2009-ம் ஆண்டு குடமுழுக்கு விழா நடந்து இருந்தது.

இதனிடையே நடப்பாண்டில் குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த 8 மாதங்களாக கோவில் வளாகத்தில் புனரமைப்பு பணிகள் நடந்து வந்தன.

தற்போது பணிகள் முடிவடைந்து வருகிற நவம்பர் மாதம் 1-ந் தேதி நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமி கோவில் குடமுழுக்கு விழாவை நடத்த விழா குழுவினர் திட்டமிடப்பட்டுள்ளனர்

அதை முன்னிட்டு நாமக்கல் நரசிம்மர் சாமி கோவில் வளாகத்தில் யாகசாலை அமைப்பதற்கான முகூர்த்தக்கால் உன்றும் நிகழ்ச்சி இன்று ஞாயிறு காலை நடந்தது.

இதையொட்டி கோவில் உதவி ஆணையர் இளையராஜா, அறங்காவலர் குழு தலைவர் நல்லுசாமி ஆகியோர் முன்னிலையில் இன்று காலை 7 மணியளவில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு முகூர்த்தக்கால் நடப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது.

இதில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் உபயதாரர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *