ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
கொரடாச்சேரி ஒன்றியம் கரையாபாலையூர் ஊராட்சியில் புதியதாக கட்டப்படவுள்ள மடப்புரம் – பாக்கம் இணைப்பு பாலம் அடிக்கல் நாட்டு விழா
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம், கரையாபாலையூர் ஊராட்சியில் பாக்கம் – கரையாபாலையூர் – கட்டளை – கல்லுக்குடி – பூங்காவூர் – ஆரிபாவூர் – நெய்குப்பை – மடப்புரம் கிராமங்கள் பயன்பெறும் வகையில் ரூ.790.40 லட்சம் மதிப்பீட்டில் 116.24 மீ நீளத்திற்கு வெட்டாற்றின் குறுக்கே புதியதாக கட்டப்படவுள்ள மடப்புரம் – பாக்கம் இணைப்பு பாலம் அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் அவர்கள் உடனிருந்தார்.
நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் (பொறுப்பு) வடிவேல் (மகளிர் திட்டம்), மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலசந்தர், செயற்பொறியாளர் சடையப்பன், உதவி செயற்பொறியாளர் மகாதேவன், ஊராட்சி மன்றத்தலைவர் மீனா கல்யாணசுந்தரம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.