சென்னை மணலியில் ரூபாய் 1. 90 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி எம்பி, எம்எல்ஏ க்கள் பங்கேற்று திறந்து வைத்தனர்
வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 1.90 கோடி மதிப்பீட்டில் மணலி பாடசாலை தெருவில் உள்ள சென்னை தொடக்கப் பள்ளியில் 6 வகுப்பறை கொண்ட இரண்டு மாடி கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது
இந்த பள்ளி கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சியில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி சட்டமன்ற உறுப்பினர்கள் மாதவரம் சுதர்சனம் திருவொற்றியூர் கேபி சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு புதிய வகுப்பறை கட்டிடங்களை கல்வெட்டை திறந்து வைத்து பின்னர் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி புதிய பள்ளி வகுப்பறையை திறந்து வைத்தனர்
பின்னர் தேசிய அளவில் சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழை கோப்பை மற்றும் மெடல்களை வழங்கினார்கள் அவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் மான் கொம்பு ஒற்றை சிலம்பு உள்ளிட்ட சிலம்பம் விளையாடி அசத்தினர்
முன்னதாக பள்ளி மாணவ மாணவிகள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை பாராட்டி வாழ்த்து பாடல் பாடினார்கள் இதனை பெற்றோர்கள் ஆசிரியர்கள் வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் உள்ளிட்டோர் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்