லயன்ஸ் கிளப் ஆப் அக்சயம் , கோவை மாவட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு மற்றும் சி.எஸ்.டபிள்யூ பவுண்டேஷன் ஆகியோர் இணைந்து போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது.

லயன்ஸ் கிளப் ஆப் அக்‌சயம் சார்பாக போதைபொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவது என்ற நோக்கத்துடன் தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, லயன்ஸ் கிளப் ஆப் அக்சயம் , கோவை மாவட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு மற்றும் சி.எஸ்.டபிள்யூ பவுண்டேஷன் ஆகியோர் இணைந்து,போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது..இதில் லயன்ஸ் கிளப் ஆப் அக்சயம் தலைவர் சந்திர பிரபா தலைமை தாங்கினார்.

கோவை வ.உ.சி.மைதான வளாகத்தில் துவங்கிய இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்,கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன், லயன்ஸ் கிளப் 324 சி மாவட்ட ஆளுநர் ஜெயசேகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேரணியை துவக்கிவைத்தனர்..

இதில்மாணவர்கள் இளமைப்பருவத்தை நல்வழியில் பயன்படுத்த வேண்டும். போதைப்பழக்க வழக்கங்கள் பாவச் செயலாகும். போதை பொருள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் அதனை தடுப்பதற்கும், அதனை ஒழிப்பதற்கும், மற்றவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் உறுதுணையாக இருக்க வலிறுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட அரிமா சங்க நிர்வாகிகள் நித்யானந்தம்,ராஜசேகர்,அக்சயம் கிளப் செயலாளர் சிவராஜ்,பொருளாளர் கர்ணன்,மாவட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலர் சரண்யா,பிஷப் அப்பாசாமி கல்லூரி முதல்வர் ஜெமிமா விண்ஸ்டன்,சி.எஸ்.டபிளூ பவுண்டேஷன் ஃபாசில்,ஹரிஷ் குமார்,உட்பட மாணவ,மாணவிகள் ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *