பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
செல்போன் பேசிக் கொண்டு எந்த ஒரு எலக்ட்ரானிக் பொருட்களை பழுது வேலை செய்யும் இப்பொழுது செல்போன் பேசிக் கொண்டு வேலை பார்க்க வேண்டாம் எனவும் மேலும் இது போன்ற விபத்துக்கள் தடுக்க சார்ஜ் போட்டுக்கொண்டு போனில் பேச வேண்டாம் என்றும்
கபிஸ்தலம் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி பொதுமக்களை பாதுகாப்பாகவும் கவனமுடன் செயல்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் வாட்ச், செல்போன் சர்வீஸ் கடையில் இறந்த கோகிலாவின் தடய அறிவியல் துறை தஞ்சாவூர் மாவட்ட உதவி இயக்குனர் ராமசந்திரன் பல்வேறு தடங்களை சேகரித்து கள ஆய்விற்கு எடுத்து சென்றார்.
முன்னதாக பாபநாசம் அரசு மருத்துவமணையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த கோகிலாவின் உடலை தடய அறிவியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.