செய்தியாளர் இரா. ஏசுராஜ்.
தஞ்சாவூர் மாவட்டம் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியும் தஞ்சாவூர் செட் இன்டியா சமூகசேவை நிறுவனமும் இணைந்து நடத்தும் பெண்கள் அதிகாரமளித்தல் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை வேங்கரையன் குடிகாடு ஸ்ரீ வில்லாயி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது
நிகழ்ச்சியில் செட் இன்டியா திட்ட இயக்குனர் பா.ஜெய் எடில்பர்ட் தலைமை தாங்கி உரையாற்றினார். மாவட்ட சமூக நல அலுவலகம் ஒருங்கிணைந்த சேவை மையம் மைய நிர்வாகி மு. விமலா கருத்துரையாற்றினார்
வேங்கரையன் குடிகாடு நூறு நாள் வேலை திட்டத் தலைவி, இந்திரா சிறப்புரையாற்றினார்.களப்பணி ஆலோசகரின் முனைவர். எட்வின் பிராங்க்ளின் சாமுவேல், வழிகாட்டுதலின் படிசெ. ஹர்ஷவர்தன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதில் 60 மேற்பட்ட நூறு நாள் நாள் வேலை மற்றும் சுயஉதவிக்குழு பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர
செய்தியாளர்
இரா. ஏசுராஜ்