இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

மதுராந்தகம்
செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்யூர் பஜார், இடைக்கழிநாடு பேரூராட்சி, கடப்பாக்கம்,
உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி
விசர்சன பொதுக் கூட்டத்தில் சனாதனத்திற்காக குரல்
கொடுத்த மாவட்ட தலைவர் இரா.பாலசுப்பிரமணியம் அவர்களை காவல்துறை பொய் வழக்கில் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் விடுதலை செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர் சின்ன கவி சீராமசெயம் தலைமை தாங்கினார். இதில் காஞ்சி கோட்ட செயலாளர் ஆர்.டி.மணி, மணிகண்டன்,
மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் அன்னைராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டியன்,
விக்னேஷ், கங்காதரன், உட்பட மாவட்ட ஒன்றிய நகர கிளை பொறுப்பாளர்களும் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *