ஜி.பி.மார்க்ஸ் செய்தியாளர்.
செங்கல்பட்டில் அமைந்துள்ள ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லூரியில் அடிப்படை வசதிகளை சரி செய்திட கோரி இந்திய மாணவர் சங்கத்தின் கிளை செயலாளர் தோழர் சத்யா தலைமையில் போராட்டம் நடைபெற்றது,
இந்த போராட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட மாணவர் சங்க மாவட்ட செயலாளர் தோழர் தமிழ் பாரதி, மாவட்டத் துணைத் தலைவர் தோழர் வசந்த் குமார் , கிளை நிர்வாகிகள் ஷர்மி, நவீன், நந்தினி நித்திஷ், ஆகாஷ் மற்றும் கல்லூரியில் பயில்கின்ற மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.