திருவொற்றியூர் பலகை தொட்டி குப்பத்தில் அருள்மிகு சுந்தர வெங்கடேச பெருமாள் கோவில் மஹா கும்பாபிஷேகம்
அருள்மிகு சுந்தர வெங்கடேச பெருமாள் ஆலயம் அருள்மிகு சின்னம்மன் ஆலயம் ஆலய நூதன ஆலய அஷ்டபந்தன மஷா கும்பாபிஷேக நீராட்டு விழா மிக விமர்சியாக நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்து வழிபட்டனர்
திருவொற்றியூர்
எண்ணூர் நெடுஞ்சாலையில் திருவெற்றியூர் பலகை தொட்டி குப்பம் பகுதியில் பழமையான கோவிலை புதுப்பிக்கப்பட்டு இரண்டு சன்னதிகள் பெருமாள் மற்றும் சின்னம்மன் ஆகிய இரண்டு சன்னதியில் உற்சவ பெருமாள் சின்னம்மன் மற்றும் பரிவார மூர்த்திகள் சன்னதியில் இன்று மிக விமர்சையாக மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது
இதில் கடந்த 21ஆம் தேதி வியாழக்கிழமை அன்று பந்தக்கால் நடுதல் உடன் துவங்கிய இந்த கும்பாபிஷேக திருவிழாவானது26 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை யாகசாலை அமைத்து அதில் விக்னேஸ்வர பூஜை கோ பூஜை கணபதி ஹோமம் லட்சுமி ஹோமம் நெய்வேத்தியம் தீபாராதனை மற்றும் கலசங்களுக்கு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஆனது ஊற்றப்பட்டு பூரணதி செய்யப்பட்டு மூன்று கால யாக பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றது
காலை சதீஷ் குருக்கள் முன்னிலையில் கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் ஓமங்கள் யாக குண்டத்தில் சிறப்பு மஹா பூரணாதி செய்யப்பட்டு கலசங்களை குருக்கள் தலையில் சுமந்தவாறு கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து பின்பு விமான கலசத்திற்கு புனித நீரானது ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற்றது இந்த மஹா கும்பாபிஷேகத்தில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கேபி சங்கர் மற்றும் பலகை தொட்டி குப்பம் நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
இந்த கும்பாபிஷேக நன்னீராட்டு விழாவில் பலகை தொட்டி குப்பம் காசி கோயில் குப்பம் திருவொற்றியூர் எண்ணூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பெண்கள் பக்தர்கள் வந்திருந்து மஹா கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்து வழிபட்டனர் இவர்களுக்கு புனித நீரானது ஊற்றப்பட்டு பின்னர் மஹா தூப தீபம் ஏற்றப்பட்டு வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாரதனைகளை செய்யப்பட்டது பின்னர் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பிலும் இளைஞர்கள் சார்பிலும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது