கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் உள்ள நகர் மன்ற அரங்கில் நகர்மன்ற அவசரக்கூட்டம் நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் தலைமையில் நகராட்சி ஆணையாளர் பெர்பெற்றி டெரன்ஸ் லியோன், நகர் மன்ற துணைத்தலைவர் த.ம.ச.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது

இக்கூட்டத்தில் நகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் தெருவிளக்கு, மயானக்கூரை, பள்ளி சுற்றுச்சுவர், குடிநீர் பாதுகாப்பு, பழுதான சாலை சீரமைப்பு, கழிவு குப்பைகளை உடனுக்குடன் அகற்றவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை காலதிமதமின்றி நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மன்ற உறுப்பினர்கள் வழியுறுறுத்தினர் அதைத்தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இந்த நகர் மன்ற அவசர கூட்த்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *