கண்டமங்கலம் ஒன்றியம் சொரப்பூரில் அதிமுக கமிட்டி கூட்டம் சக்கரபாணி எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது !
செய்தியாளர். ச.முருகவேல்.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் சொரப்பூரில் அதிமுக கட்சியின் பூத்கமிட்டி கூட்டம் நடந்தது. இதில் வானூர் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி கலந்துகொண்டு தலைமையேற்று பேசினார்.
கண்டமங்கலம் அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ராமதாஸ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றிபெற அனைவரும் பாடுபடவேண்டும் , பூத்கமிட்டியில் பங்குபெறும் அதிமுகவினர் விழிப்புடன் செயல்படவேண்டும் போன்ற கருத்துக்கள் வலியுறுத்தி பேசப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சொரப்பூர் கட்சி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், திரளாக கலந்துகொண்டனர்.