கும்பகோணம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்.

கும்பகோணம் அருகே முழையூர் கிராமத்தில் 30 வருடங்களாக பயன்படுத்தி வந்த விளையாட்டு மைதானம் மற்றும் சமுதாயக்கூடம் ஆகியவற்றை ஆக்கிரமிப்பு செய்து அங்கன்வாடி கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் உண்ணாவிரத அறப்போராட்டம் …..

உடனடி நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முதல்வருக்கு கோரிக்கை ….

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே முழையூர் இந்திரா நகர் ஆதிதிராவிடர் கிராமம் உள்ளது இக்கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில். 30 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த விளையாட்டு மைதானம் மற்றும் சமுதாய கூடம் ஆகியவற்றை ஊராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்து அங்கன்வாடி கட்டுவதால் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து 100- க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தங்கள் கிராமத்திற்கு ஊராட்சி நிர்வாகம் எந்த ஒரு அடிப்படை வசதிகளை செய்து தர மறுப்பதாகவும், கழிவுநீர் வடிகால் அமைத்து தருவதாக பாதியிலேயே விட்டுவிட்டதாகவும் இதனால் சாக்கடை தேங்கி நிற்பதாகவும், சுகாதார சீர்க்கேட்டை ஏற்படுத்தி பெரும் அட்டூழியம் செய்வதாகவும் ,

இந்நிலையில்ஏற்கனவே அங்கன்வாடி இருந்த இடத்தில் புதிதாக கட்டிடம் கட்டாமல் ஆதிதிராவிடர் தெரு என்பதால் 30 வருடங்களாக. பயன்படுத்தி வந்த விளையாட்டு மைதானம் மற்றும் சமுதாய
கூடத்தை ஆக்கிரமிப்பு செய்து அங்கன்வாடி கட்டுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றன.

மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கா விடில் மேலும் வலுவான போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *