பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்.

பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் …

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே
அய்யம்பேட்டையில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சோசலிச தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பஸ் நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். அன்பழகன், பூபதி, ஆறுமுகம், சின்னதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். அய்யம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் டாக்டர்களை பணியமர்த்த வேண்டும், எக்ஸ்ரே, ஸ்கேன் எடுக்கும் வசதி செயல் படுத்திட வேண்டும், அய்யம்பேட்டை பகுதி நீர் நிலைகளை தூர் வாரி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சியின் மாநில பொது செயலாளர் உமாபதி, வக்கீல் சின்னசாமி, மாநில தலைவர் வீரமணி, பொருளாளர் சங்கர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *