வலங்கைமான் அருகே உள்ள குடவாசல் பகுதியில் உள்ள காப்பாணா மங்களத்தில் உணவு வணிகர்களுக்கான பதிவுமற்றும் உரிமம் பெறும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள குடவாசல் பகுதியில் உள்ள காப்பணா மங்கலம் மாரியம்மன் திருமண மண்டபத்தில், திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை, காப்பாணாமங்கலம் வர்த்தகர் சங்கம் இணைந்து உணவு வணிகர்களுக்கான பதிவு மற்றும் உரிமம் பெறும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
முகாமில் 60 பயனாளிகள் கலந்து கொண்டு பதிவுமற்றும் உரிமம் பெற விண்ணப்பம் செய்தனர். நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்பு அலுவலர் த. கிருஷ்ணமூர்த்தி மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள் பி. ஆர் . என். கென்னடி, சாந்தோம் தாஸ் ,அசோகன், வி.சி. கண்ணன், சையது இப்ராஹிம் உள்பட பலர் கலந்துகொண்டு முகாமை சிறப்பித்தனர்.