திருவள்ளூர்
பூதூர் ஊராட்சி மகாலட்சுமி அம்மன் கோயிலில் 31 ஆம் ஆண்டு பெண்கள் வாடை பொங்கல் வைத்து பால்குடம் ஏந்தி வந்து நேர்த்திக் கடனை செலுத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட் டது பூதூர் ஊராட்சி இந்த ஊராட் சியில் புகழ்பெற்ற சக்தி வாய்ந்த ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் ஆலயம் உள்ளது
இந்த ஆலயத்தில் வருட ம்தோறும் புரட்டாசி மாதத்தில் பெண்கள் வாடை பொங்கல் வைத் து பால் குடம் ஏந்தி நேர்த்திக் கடனை செலுத்துவர். அதன்படி நேற்று 31 ஆம் ஆண்டு தினத்தை யொட்டி நூற்றுக்கணக்கான பெண்கள் வாடை பொங்கல் வைத்து பால் குடம் ஏந்தி நேர்த்திக் கடன் செலுத்தினர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி பாலா மணி மற்றும் கிராம பொதுமக்கள் செய் திருந்தனர்.