வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம் விருப்பாச்சிபுரம் ஊராட்சியில் தொடக்க விழா நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப் பணித்திட்ட சிறப்பு முகாம் விருப்பாச்சிபுரம் ஊராட்சியில் டி.இ. எல் .சி தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.
முகாமிற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மு. நாவளவன் தலைமை வகித்தார்,
டி .இ. எல் .சி தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியர் ஆர். இன்பராஜ் முன்னிலை வகித்தார்,அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிஉதவி தலைமையாசிரியர் கே. சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார்,முகாமை விருப்பாச்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ் மல்லிகா சிவக்குமார், துணைத் தலைவர் எம்.சுஜிதா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக ஆலோசகர் பா. சிவனேசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் க. செல்வம், துணைத் தலைவர் புலவர் சிவ. செல்லையன், பொருளாளர் எஸ். ஆர். ராஜேஷ், இணை செயலாளர் எஸ். ரவிச்சந்திரன் பள்ளி மேலாண்மை குழு தலைவர் சு.சுமித்ரா, பள்ளி ஆசிரியர் ஜி. காமராஜ்,பெற்றோர் ஆசிரியர்கள் கழக செயற்குழு உறுப்பினர் ஆசிரியை எஸ்.ஜெயஸ்ரீ, பேரூராட்சி மன்ற உறுப்பினர் எஸ். ரம்ஜான்பீவி சிவராஜ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள், பின்னர் முகாம் தொடங்கப்பட்டது. இந்த முகாம் ஒரு வார காலம் நடைபெறுகிறது.