பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே சக்கராபள்ளி கோவில் குளத்தில் திருக்கயிலை சிவ பூத கண திருக்கூட்டம் சார்பில் தூர்வாரும் பணிகள் …
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சக்கராப்பள்ளியில் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலின் இணைக் கோவிலான தேவநாயகி அம்பாள் சமேத சக்கர வாகேஸ்வரர் கோவில் உள்ளது.
இக் கோவிலுக்கு சொந்தமான தாமரை குளத்தில் ஆகாய தாமரை செடிகள் மண்டி கிடந்தது இதனை யடுத்து திருக்கயிலை சிவ பூத கண திருக்கூட்டம் சார்பில் செடி, கொடிகளை அகற்றி தூய்மை செய்தனர்.
இதில் அடியார்கள், பொதுமக்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.