வாடிப்பட்டி அருகே புதிய சிறைச்சாலை அமைக்க எதிர் தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு
வாடிப்பட்டி அருகேபுதிய சிறைச்சாலை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள தெத்தூர் பகுதியில் புதியதாக சிறைச்சாலை அமைக்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான நிலத்தை தேர்வு செய்யும் பணி இன்று தொடங்கியது.
இதில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் விவசாயம் செய்யாமல் வேலி அமைத்து குடியிருப்புக்காக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறி பொதுமக்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஜேசிபி இயந்திரங்கள் மூலம் விவசாய நிலங்களில் புகுந்து அங்குள்ள மோட்டார் , தடுப்பு வேலிகள் மற்றும் வீடுகளை அதிகாரிகள் போலீசார் முன்னிலையில் இடித்துஅதிகாரிகள் இடத்தை கைப்பற்ற முயன்றனர்.
இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் போலீசார் மற்றும் அதிகாரிகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் புதிய சிறைச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் 50 ஆண்டு காலமாக விவசாய நிலங்களில் மானாவாரியாக பயிரிட்டு விவசாயம் செய்து வருவதாகவும் வாழ்வாதாரத்தை அரசு பறிக்க நினைக்கிறது எனவும் இப்பகுதியில் சிறைச்சாலை அமைக்க கூடாது எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதில் சிறிது நேரம் பரபரப்பானது.உடனடியாக அதிகாரிகள் மற்றும் போலீசார் அரசிடம் மேல்முறையீடு செய்யப்படும் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றதால் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர் இதனால் இப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.