ஆலங்குளம் அருகே காளத்திமடம், புதுப்பட்டி மற்றும் மருதம்புத்தூர் கிராம பகுதி குள கரைகளில் திமுக சுற்று சூழல் அணி சார்பில் பனை விதை நடும் பணி

முத்தமிழ் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆலடி அருணா அறக்கட்டளை, தொழில் அறக்கட்டளை மற்றும் திமுக மாநில சுற்றுசூழல் அணி சார்பில் காளத்தி மடம், புதுப்பட்டி, மற்றும் மருதம்புத்தூர் கிராம பகுதி குளகரைகளில் 2500 பனை விதை நடும் பணி தமிழ்நாடு மாநில சுற்றுசூழல் அணி மாநில தலைவரும் முன்னாள் அமைச்சருமான பூங்கோதை ஆலடி அருணா தலைமையில் நடைப் பெற்றது.

தென்காசி மாவட்ட திமுக பொருப்பாளர் ஜெயபாலன், பனை விதை களை நட்டு தொடங்கிவைத்தார்.

காளத்தி மடம் புதுப்பட்டி மற்றும் மருகம்புத்தூர் திமுக கிளை நிர்வாகிகள் மருத்துவர் பூங்கோதை ஆலடி அருணா, மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், ஆகியோருக்கு பட்டாசு வெடித்தும், மேள தாளம் முழங்க சால்வை அணிவித்து
வரவேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பாப்பாடி ஒன்றிய செயலாளர் மாரி வண்ணமுத்து முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஆலங்குளம் ஒன்றிய சேர்மன் திவ்யா மணிகண்டன், தொழில் அதிபர் மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர்கள் சங்கீதா சுதாகர், பசுபதிதேவி திராவிடமணி, சண்முகராம், மீனா சுப்பிரமணியன், முன்னாள் புதுப்பட்டி தொடக்க வோளாண்மை கூட்டுற சங்க தலைவர் மாரியப்பன், புதுப்பட்டி பஞ்சாயத்து தலைவர் பால் விநாயகம், மருதம்புத்தூர் பூசத்துரை,
காளத்திமடம் திமுக நிர்வாகிகள் சங்கிலி துரைப்பாண்டியன், அன்பழகன், முத்து கிருஷ்ணன், அருணாசலம், ரவி, ராஜேஷ்,கண்ணன், அசோகன், கதிரவன், ராஜ்குமார், செல்வம், திராவிடமணி சண்முகராஜ், தென்னரசு, அன்பழகன், கதிரேசன், தமிழரசு, புதுப்பட்டி திமுக கிளை நிர்வாகிகள் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வழகறிஞர் சிவக்குமார்,
பாப்பாக்குடி உதய நிதி நற்பணி மன்ற ஒன்றிய தலைவர்
சுந்தர், கிளை செயலாளர் ஆசிர்வாதம்,
செல்வக்குமார், கொசலவன், மாரியப்பன், ஒன்றிய துணை செயலாளர் சர்மிளா, ஏசுராஜன், கந்தசாமி, செல்வம், திமுக மூத்த நிர்வாகி மூக்கன், மருதம்புத்தூர் திமுக கிளை நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர் அருணாசலம், பாலாஜி, சிவ சுப்பிரமணியன், வில்லிசை கலைஞர் பரமேஸ்வரி, அமுதா, உள்பட பலர் கலந்து கொண்டனர் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *