பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்.
பாபநாசம் அருகேஅய்யம்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், பலத்த காற்றுடன் பெய்த கனமழை..
சாலையின் நடுவே மரம் முறிந்து விழுந்ததால் தஞ்சை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மானாங்கோரை, பசுபதிகோயில், வடக்குமாங்குடி, கணபதி அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் கருமேகங்கள் சூழ்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
இதனால் தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் மானாங்கோரைப் பகுதியில் சாலையில் இருந்த புளியமரம் சாலையின் நடுவே வேரோடு சாய்ந்து விழுந்துஇதனால் தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விரைந்து வந்த அதிகாரிகள் சாலையில் கிடந்த மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.