பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

பாபநாசம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் கூடிய பெய்த கனமழை…

பொதுமக்கள் , விவசாயிகள் மகிழ்ச்சி…..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சாலியமங்கலம், கபிஸ்தலம், திருப்பாலத்துறை, திருக்கருக்காவூர் மற்றும் அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில் மாலை பொழுது கருமேகங்கள் சூழ்ந்து பலத்த சூறைக்காற்றுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கன மழையினால் சம்பா சாகுபடி தொடங்கிய. நிலையில் பெய்த கனமழையால் தேவையான மழைநீர் கிடைத்ததாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *