சகாதேவன் போச்சம்பள்ளி செய்தியாளர்
மத்தூர் பேருந்து நிலையத்தில் அமமுக சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் மத்தூர் பேருந்து நிலையத்தில் எம்ஜிஆரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் கணேஷ் குமார் தலைமையில் எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதை தொடர்ந்து பொதுமக்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. ஒன்றிய செயலாளர்கள் மோகன், செந்தில், அம்மா பேரவை நரேஷ் ,பொதுக்குழு உறுப்பினர் ஆனந்தன், ஓட்டுனர் அணி முருகன், நகர செயலாளர் பாலையா, ஒன்றிய இணைச் செயலாளர் சிவாஜி, ஒன்றிய துணைச் செயலாளர் பெருமாள், எம் ஜி ஆர் மன்ற பழனி, கிட்ட பாய், பத்மநாதன், பிரிவின்ராஜ், கமலநாதன், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.