சங்கரன்கோவிலில் ரூ.11.33 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யை மாவட்ட ஆட்சித்தலைவர் குத்து விளக்கேற்றி பார்வையிட்டார்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ரூ.11.33 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ரூ.133 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈராஜா ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை இரவிச்சந்திரன் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் லாலா சங்கரபாண்டியன் சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, சங்கரன்கோவில் நகர் மன்ற துணைத் தலைவர் செல்வி, களப்பாகுளம் பஞ்சாயத்து தலைவர் சிவசங்கரி, சங்கரன்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் விக்டோரியா தங்கம், திருநெல்வேல மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் பாஸ்கரன், உதவி செயற்பொறியாளர் (கட்டிடம் மற்றும் பராமரிப்புத்துறை நல்லசிவம், உதவி பொறியாளர் (கட்டிடம் மற்றும் பராமரிப்புத்துறை) காளிஸ்வரன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி அலுவலர் இராம சுப்பிரமணியன், மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *