மாநில அளவில் ஒற்றை சிலம்பம் போட்டி இராணிபேட்டை மாவட்டத்தில் நடைப்பெற்றது
இப்போட்டியில் பதினான்கு வயதிற்குட்பட்டோர் பிரிவில் தென்காசி மாவட்ட அளவில் ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவன் கிசோர்குமார். முதல்பரிசு பெற்று தங்கபதக்கம் பெற்றார் மேலும் அதே பள்ளியில் எழும்வகுப்பு பயிலும் மாணவி பாக்கியவதி 2-வது பரிசு பெற்று வெள்ளி பதக்கம் பெற்றார்.

இவர்கள் இருவரும் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வருகை புரிந்தனர்

இவர்கள் இருவருக்கும் ஆலங்குளம் ஒன்றியம் சார்பில் அங்குள்ள காமராஜர் சிலை அருகே ஆலங்குளம் ஒன்றிய சேர்மன் எம் திவ்யா மணிகண்டன் தலைமை யில் மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்ப்பட்டது.

நிகழ்வில் தொழில் அதிபர் மணிகண்டன், சிறப்பு நிலைப் பேருராட்சி தலைவர் சுதா மோகன்லால்,
அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய ஆசிரியர்கள் பத்தக்கம் வென்ற குழந்தைகளின் பெற்றோர்கள், மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *