வலங்கைமான் ஸ்ரீ உண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீ அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் தைப்பூச பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தீர்த்தவாரி, புஷ்ப பல்லாக்கு நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ உண்ணாமலையம்மன் சமேத ஸ்ரீ அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் கடந்த பத்து நாட்களாக தைப்பூச பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. கோபூஜை,ஜபம், ஹோமம், யாகசாலை பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது,
அதனைத் தொடர்ந்து கடந்த 9 நாட்களாக நடைபெற்ற யாகசாலை பூஜை காலம் 18 புனித நீர்களால் சுவாமி,அம்பாள் மகா அபிஷேகம் நடைபெற்றது,காலை 10 மணிக்கு தைப்பூசம் விழாவை முன்னிட்டு பூஜைகள் நடைபெற்று, 11-30 மணிக்கு தீர்த்தவாரி, சுவாமி அம்பாள் கலசாபிஷேகம் மற்றும் அதைத் தொடர்ந்து 12- மணிக்கு மகா தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்குதலும் நடைபெற்றது,
மாலை 6-30 மணிக்கு துவஜா அவரோகணம், கொடி இறக்கம் நடைபெற்றது. இரவு 8மணி அளவில் பஞ்சமூர்த்தி சுவாமிகள் புஷ்ப பல்லக்கில் வீதி உலா காட்சியும் நடைபெற்றது.
நேற்று மாலை 6:00 மணிக்கு சண்டிகேஸ்வரர் உற்சவம், ஹோமம், பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. கடந்த 10 நாட்களாக நடைபெற்ற யாகசாலை பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகளை திப்பிராஜபுரம் என். சுவாமிநாத சிவாச்சாரியார், விருப்பாச்சிபுரம் ஏ.குமார் சிவாச்சாரியார், ஏ. ஞானஸ் கந்தன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
தினந்தோறும் சிறப்பு மங்கல இசையை தென் திருவண்ணாமலை ஆஸ்தான வித்வான் எஸ். மணிமாறன் குழுவினரின், யூ. அருண்குமார், எஸ். பிரகாஷ் குழுவினரின் மங்கள இன்னிசை நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள், தொழிலதிபர்கள், பொதுமக்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அதிகாரி அ.ரமேஷ், பரம்பரை அறங்காவலர் வலங்கைமான் கே. நடராஜன் & சகோதரர்கள், சென்னை ஜி. சுப்பிரமணியன், ஸ்ரீ அருணாசலேஸ்வரர் நற்பணி மன்ற அறக்கட்டளை மற்றும் உபயதாரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.