பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் நிலை நாட்ட மீண்டும் உயிர் பெற்று வர வேண்டும் நீதிபதி ராஜசூரியா அவர்கள்….
சென்னை உயர் நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதியும், புதுச்சேரி காவலர் புகார் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான மதிப்புக்கும் , மரியாதைக்குரிய நீதிபதி ராஜசூரியா அவர்கள் நம்மை விட்டு பிரிந்தார். பாதிக்கப்பட்ட பலருக்கு நியாயம் வழங்கினார். சுயநலத்திற்காக அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் கட்டுப்படாமல் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு நீதி வழங்கியவர். ஆழமாக விசாரிப்பார். எளிதில் உத்தரவிடமாட்டார். ஆனால், நேர்மையாக நீதி வழங்குவார். காவலர் புகார் ஆணையத்தின் தலைவராக அவர் இருந்த போது போராடி மூன்று ஆணைகளை அவரிடம் இருந்து பெற்றேன். நீதி கிடைத்தது. திரு. ராஜசூரியா போன்ற நீதிபதி மக்களுக்கு கிடைப்பது அரிது. மீண்டும் உயிர் பெற்று வர வேண்டும் நீதிபதி ராஜசூரியா அவர்கள்.
இப்படிக்கு,
டாக்டர். எஸ்.ஆனந்த்குமார்
மாநில தலைவர் இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம்.
+919366666454