தினேஷ்குமார் செய்தியாளர்
திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர் புதிய மாவட்ட ஆட்சியராக தர்ப்பகராஜ் பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக பாஸ்கர பாண்டியன் பதவி வகித்து வந்தார். அவர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் புதிய மாவட்ட ஆட்சியராக தர்ப்பகராஜ் திங்கட்கிழமை இன்று காலை 10 மணி அளவில் தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
அப்பொழுது உடன் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வம், மாவட்ட திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி, ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயகுமார், உட்பட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.