விபத்தில் இறந்தவர்களின் உருவப்படத்துக்கு மதுரையில் தொல்.திருமாவளவன் அஞ்சலி

திருச்சியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாநாட் டுக்கு சென் று விட்டு, சொந்த ஊருக்கு திரும்பிய கடலூர் மாவட்டம், பரங்கி பேட்டை ஒன்றியம் வில்லியநல்லூர் கிராமத்தை சேர்ந்த முத்துக் குமார், அன்புச்செல்வன், யுவராஜ் ஆகியோர் விபத்தில் சிக்கி இறந்தனர். அவர்களின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கினார். மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் தீபம் என்ற சுடர் மொழி முன்னிலை வகித்தார். பின்னர் விபத்தில் இறந்தவர்க -ளின் உருவப்படத்திற்கு மலர் – தூவி மரியாதை செலுத்தி னார்கள் அதனைதொடர்ந்து அனைவரும் வீரவணக்கம் செலுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கட்சியின் அமைப்புச்செயலாளர் எல்லாளன், கல்வி விழிப்புணர்வு இயக்கம் மாநில துணைச்செயலாளர் ஏ.ஆர். அய்யங்காளை, நிலைய செயலாளர் ஏ சி. பாவரசு, துணைப்பொதுச் செயலாளர் வெ.கனியமுதன், ஊடக பிரிவு மாநிலச்செய லாளர் அகரன், தொழிலாளர் விடுதலை முன்ணனி மாநில துணை செயலாளர் வக்கீல் பெ.சரவணன்,மண்டல செயலார் தா.மாலின், மதுரை மாநகர் தெற்கு மாவட்டச்செயலாளர் வக்கீல் ரவிக்குமார், மதுரை புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் அரச முத்துப் பாண்டியன், கல்விபொருளாதர விழிப்புணர்வு இயக்கம் மாவட்ட அமைப்பாளர் பூபால்ராஜ்,உள்ளிட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *