தாமரைக்குளம் பேரூராட்சி கூட்டரங்கில் நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்…

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மலர்க்கொடி பொன்.சேதுராமன் முன்னிலை வகித்தார்.

வார்டு கவுன்சிலர்கள் வசந்தா, கோமதி, முருகன், பாண்டி, மைதிலி, சாந்தி, ராஜேந்திரன்,ஜாஹிர் உசேன், கவிதா, தேவகி, முத்துலட்சுமி, முனியம்மாள், பணி நியமன குழு தலைவர் பாலாமணி பழனி முருகன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தாமரைக்குளம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆளவந்தார் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *