வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தமிழ் மன்றம் சார்பில் தமிழ்க்கூடல் விழா நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ் மன்றம் சார்பில் தமிழ்க்கூடல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளியின் பட்டதாரி ஆசிரியை தீ. உமையாள் தமிழ்த்தாய் வாழ்த்து உடன் தொடங்கியது.

பள்ளியின் தலைமை ஆசிரியர் மு. நாவளவன் தலைமை வகித்தார், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் க. செல்வம், துணைத் தலைவர் புலவர் சிவ. செல்லையன், பொருளாளர் எஸ்.ஆர். ராஜேஷ், கௌரவ தலைவர் பா.சிவனேசன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் சு .சுமித்ரா, துணைத் தலைவர் சிவ. காஞ்சனா ஆகியோர் முன்னிலை வகித்தனர், சிறப்பு விருந்தினராக வலங்கைமான் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளிஉதவி தலைமைஆசிரியை முனைவர் லலிதா பேருரையாற்றினார்.

உதவி தலைமை ஆசிரியர் கி சீனிவாசன், முதுகலை ஆசிரியர்கள் லூ. பெலிக்ஸ் ராஜ் மற்றும் ஆசிரிய – ஆசிரியைகள்,பள்ளி தலைமை ஆசிரியர் சிறப்பு விருந்தினர் மற்றும் மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசுகளை வழங்கினார்கள்.

நிகழ்ச்சிகளை முதுகலை ஆசிரியை எம் அனுசுயா தொகுத்து வழங்கினார். பட்டதாரி தமிழ்ஆசிரியை ப.சித்ரா அனைவருக்கும் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *