தேசிய சமூக நல அமைப்பு
மனித உரிமை பிரிவு கலைத் திருவிழா திரன் சார்ந்த விருதுகள் வழங்கல்.

செங்கல்பட்டு மாவட்டம்
அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் தொழுப்பேடு அரசு ஆதிதிராவிடர் நல பள்ளியில் 26/1/2024 வெள்ளிக்கிழமை நடைபெற்ற
குடியரசு தின விழாவை அச்சிறுப்பாக்கம் ஒன்றியம்
முழுவதும் கொண்டாடும் வகையில்
NSWF தேசிய சமூக நல அமைப்பின் மனித உரிமை பிரிவின் செங்கல்பட்டு மாவட்ட குழுவின்
சார்பாக அரசு ஆதிதிராவிடர் நல பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் உதவியுடன் திறன் சார்ந்த மாணவர்களுக்கு கலைத் திருவிழா நடத்தி சான்றிதழ் விருதுகள் மற்றும் நோட்டு புத்தகம் பேனா பென்சில் போன்ற உபகரணப் பொருட்கள் வழங்கினர்.

மேலும்
ஆசிரியர்களின் கடமையும் நேர்மையும் பாராட்டி அவர்களுக்கு பதக்கமும் பொன்னாடையும் வழங்கப்பட்டது இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்து தந்த அனைத்து அமைப்பு நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் ஊர் பொது மக்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் NSWF தேசிய
சமூக நல அமைப்பின் சார்பாக நன்றி தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *