வலங்கைமானில் காங்கிரஸ் தொழிற்சங்கம் டி சி டி யு சார்பில் 76-வது மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில்,காங்கிரஸ் தொழில் சங்கம் டி சி டி யு சார்பில் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் 76-வது நினைவு தினம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் தொழில் சங்கம் டிசி டியு திருவாரூர் மாவட்ட தலைவர் குலாம்மைதீன் தலைமை வகித்தார்.

டி சி டி யு நகரத் தலைவர் அகமது மைதீன், காங்கிரஸ் செயற்குழு ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காங்கிரஸ் வலங்கைமான் வட்டாரத் தலைவர் சத்தியமூர்த்தி மகாத்மா காந்தியின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து அனைவராலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது.

வலங்கைமான் தியாகிகளான அப்துல் சத்தார், கரீம், ஆகியோருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது, இதில் கே. என்.ஆர்.பார்த்திபன், சீனு, சிவா மற்றும் பொது மக்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர், இறுதியாக மாணவர் காங்கிரஸ் தலைவர் சந்தோஷ் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *