சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இங்குள்ள வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி செல்வது வழக்கம். யானைகள் வனப்பகுதி வழியாக செல்லும் ரோட்டை கடந்து செல்லும் போது ரோட்டோரமாக உள்ள மரம், செடி, கொடிகளை தின்பதும் சாலையோரம் நடமாடுவது வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில் ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று வனப்பகுதி ரோட்டில் அந்த வழியாக வந்த வாகனங்களை வழிமறித்து ஒவ்வொரு வாகனங்களாக எதையோ தேடியபடி ரோட்டில் உலா வந்தது.

இதைக் கண்ட வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர். யானை தனக்கு வேண்டியது கிடைக்காததால் யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதை வாகன ஒட்டி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் வெளியிட்டது. தற்போது வைரலாகி வருகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *