பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசத்தில் புனித அந்தோணியார் ஆலயத்தின் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் விழா …
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் புனித அந்தோணியார் ஆலயத்தின் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சியில் உள்ள புனித அடைக்கல மாதா திருத்தலத்தின் பங்கு தந்தை தங்கசாமியால் கொடி மந்திரிக்கப்பட்டு கொடியினை தொடர் ஓட்டமாக பாபநாசம் வந்தடைந்து மாலை பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தலத்தின் பங்கு தந்தை கோஸ்மான் ஆரோக்கியராஜ் மற்றும் இணை பங்கு தந்தை தார்த்திஸ் ஆகியோர்களால் நிகழ்த்தப்படும் திருப்பலிக்கு பிறகு கொடியேற்றப்பட்டது..
இதற்கான ஏற்பாடுகளை ஊர் நாட்டாமைகள்,புனித அந்தோணியார் பேரவை இளைஞர்கள் செய்திருந்தனர்.