தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றிய அலுவலகம் முன்பு மோடி ஆட்சியில் கோடிகணக்கான ஊரகவேலைத் திட்டத் தொழிலாளர்களைவெளியேற்றி திட்டத்தை சீர்குலைக்கும் அபாயத்தை கண்டித்தும் ஆதார் இனைப்புடன் கூடிய பரிவர்த்தனைக்கான முறையை
ஏபிபிஸ் திரும்ப பெற வேலை அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் வேலை வழங்கிட, நிறுத்தப்பட்டுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் உடனடியாக வேலையை துவங்கிட, சம்பள பாக்கியை காலம் தாழ்த்தாமல் வழங்கிட ஊரக வேலை திட்டத்தை தானடித்த மூப்பாக திருத்துவதை நிறுத்த கோரி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க சார்பில் பொறுப்பாளர்
எஸ் ராமசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் பி.குணசீலன் சிறப்புரை ஆற்றினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் இ.பாலு,விவசாய சங்க மாவட்டக்குழு உறுப்பினர் நல்லையா,பீடி சங்க தாலுகா செயலாளர் பரமசிவன்ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி பேசினார்கள்,
இந் நிகழ்வில் சக்திவேல், பத்திரகாளி,நெட்டூர் லீலா, வள்ளியம்மாள்,பீடி சங்க பால்ராஜ், மாடசாமி,
ராஜ மேகலா சந்தனகுமார், அந்தோணி முத்து, மாதர் சங்க லெட்சுமி, சின்னத்தாய், ஆறுமுகம், பங்கேற்றனர் இறுதியில் வெற்றிவேல் நன்றி கூறினார்.