செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த செய்யாறு வட்டம், தென் எலப்பாக்கம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் தமிழ்மன்றம் சார்பில் தமிழ்க்கூடல் விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் இர. கந்தசாமி தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்க தலைவரும், கொரக்கோட்டை அரசினர் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருமான வே. சிவராமகிருஷ்ணன் பங்கேற்று தமிழின் தொன்மையை சிறப்புரை ஆற்றினார்.
மேலும் பள்ளி ஆசிரியர்கள் பிரேமலதா, கோகுல முனியன், கமலநாதன், அசீசா உள்ளிட்டோர் பங்கேற்று கருத்துரைகளை வழங்கினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.