கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின்கீழ் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள நவீன பேருந்து நிறுத்தத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் திறந்து வைத்தார்.

உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் அவர்கள், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் ம.சிந்தனைச்செல்வன் அவர்கள், சிதம்பரம் சார் ஆட்சியர் செல்வி. ரஷ்மி ராணி அவர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *