அனேரி கிராமத்தில் அரசு பள்ளி ஆண்டு விழா! ஊராட்சி மன்ற தலைவர் பங்கேற்பு..

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அனேரி கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா மற்றும் பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் வனிதா தலைமையில் நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மேற்கு மாவட்ட பாமக செயலாளர் ஏ.பி.சிவா மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பிரேமலதா சிவா ஆகியோர் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி சிறப்புரை ஆற்றினர்.

இதில் வட்டார கல்வி அலுவலர் நெடுஞ்செழியன், ஊர் கவுண்டர்கள் கோபால், விஸ்வநாதன், ராஜீ, அன்பு மற்றும் பள்ளி ஆசிரியர்கள் சாந்தகுமார், சுப்பிரமணி, முல்லை மலர்,செல்வி,பள்ளி மேலாண்மை குழு தலைவர் பூங்கொடி, பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *