குரும்பேரி , மட்றப்பள்ளி பகுதியில் திமுக சார்பில் திண்ணை பிரசாரம். திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி, மாநில திமுக மருத்துவர் அணி துணை அமைப்பாளர் கம்பன் பங்கேற்பு..

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் குரும்பேரி மற்றும் மட்றப்பள்ளி பகுதியில் புதன் கிழமை இன்று காலை 10.30 மணி அளவில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக சார்பில்
இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் திண்ணை பிரசாரம் கந்திலி ஒன்றிய திமுக செயலாளர் மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளர்களாக திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி மற்றும் மாநில திமுக மருத்துவர் அணி துணை அமைப்பாளர் கம்பன் ஆகியோர் கலந்து கொண்டு வீதி வீதியாக சென்று திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதில் கந்திலி ஒன்றிய திமுக அவைத் தலைவர் ராஜா, ஒன்றிய சேர்மன் திருமதி திருமுருகன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் தசரதன், திமுக நிர்வாகிகள் தெய்வக்குமார், பாரி, குலோத்துங்கன், ஈஸ்வரன் மற்றும் திமுகவின் இன்னால்
முன்னால் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *