எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே திருவெண்காடு புதன் ஸ்தலமாக விளங்கும் சுவேதாரண்யேஸ்வரர் கோவில் இந்திரப் பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் திருவிழா வெகு விமர்சியாக தொடங்கியது தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. காசிக்கு இணையான தலங்களில் முதன்மையான இக்கோவிலில் சிவமூர்த்தி, அம்பாள், தீர்த்தம், தல விருட்சம் அனைத்தும் மூன்றாக அமைந்துள்ளது. பட்டினத்தடிகளார் சிவதீட்சை பெற்ற, மெய்கண்டார் அவதரித்த இத்தலம் ஆதி சிதம்பரம் என போற்றப்படுகிறது.
இது நவகிரகங்களில் புதன் ஸ்தலமாக திகழ்கிறது. இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் இந்திர திருவிழா 10 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு இந்திர பெருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது அதனை தொடர்ந்து அம்பாள் உள்ளிட்ட சுவாமிகள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தினந்தோறும் வீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய திருவிழாக்களாக கருதப்படும் சகோபுர திருவிழா கடந்த 25ஆம் தேதியும்,27 ஆம் தேதி திருக்கல்யாணம் திருவிழாவும் நடைபெற்றது. தொடர்ந்து ஒன்பதாம் நாள் திருவிழாவான தேரோட்டம் இன்று விமர்சையாக தொடங்கியது .
தேரோட்டத்தை முன்னிட்டு விநாயகர், முருகன், பிரம்ம வித்யாம்பிகையுடன் கூடிய சுவேவேதாரனேஸ்வரர் உள்ளிட்ட சுவாமிகள் தனி தனி தேர்களில் எழுந்தருளினர். தொடர்ந்து சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தேரின் முன்பு கூடிய திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தொடர்ந்து இன்று மாலை தேர் நிலையை வந்து அடையும். இந்த தேரோட்டத் திருவிழாவில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்று தேரை படம் பிடித்து இழுத்தனர்.தொடர்ந்து மார்ச் 3ஆம் தேதி தெப்போற்சவம் நடைபெற உள்ளது.