வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சி நிதி, நாடாளுமன்ற தேர்தல் நிதி வழங்கும் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி தனியார் திருமண கூடத்தில், வலங்கைமான் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சி வளர்ச்சி நிதி, நாடாளுமன்ற தேர்தல் நிதி வழங்கும் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வலங்கைமான் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் எஸ். எம். செந்தில்குமார் தலைமை தாங்கினார்.

திருவாரூர் மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கு. ராஜா கட்சி வளர்ச்சி நிதி, நாடாளுமன்ற தேர்தல் நிதியை பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் விவசாய சங்க ஒன்றிய தலைவர் எம்.கலியபெருமாள், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ஜி. ரவி, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய பொருளாளர் ஏ. மருதையன், ஏ ஐ ஒய் எப் ஒன்றிய செயலாளர் வி. பாக்கியராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் எம். கண்ணையன் மற்றும் கே. மதியழகன்,ஏ.தேசிங், கே. எஸ்.விஜயகுமார், ஜி. பாஸ்கர், எஸ் .சுதாகர், எம். ஞானசேகரன் உள்பட கிளைச் செயலாளர் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *