தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு மற்றும் நேர்மையாக வாக்களித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகின்றன.

தென்காசி மாவட்டத்தில் மாநில சராசரிக்கும் குறைவாக உள்ள 50 வாக்குச் சாவடிகள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும்வீடு வீடாகச் சென்று தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள்
அடங்கிய துண்டு பிரதிகள், ஸ்டிக்கர்ஸ் ஒட்டுதல், தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடத்துதல், பொது இடங்களில் தேர்தல் விழிப்புணர்வு போஸ்டர்கள் ஒட்டுதல், வர்த்தக நிறுவனங்களில் உரிமையாளர்கள் மற்றும் வாடிக்கை யாளர்களுக்கு துண்டு பிரதி வழங்குதல் மற்றும் ஸ்டிக்கர்ஸ் ஒட்டுதல், வர்த்தக நிறுவனங்களில் வழங்கப்படும் பில்களில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற செய்தல், பேருந்து நிலையம் மற்றும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மெழுகுவர்த்தி ஏந்தி மகளிர் சுய உதவி உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் தேர்தல் உறுதிமொழி எடுத்தல் போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு மாநில மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்க வட்டார இயக்க மேலாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், சமுதாய அமைப்பாளர்கள், போரூராட்சி மற்றும் நகராட்சி அலுவலர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *