ஆ.மோகன்ராஜ்,செய்தியாளர் காரைக்கால் மாவட்டம்
காரைக்காலில் 100% வாக்கு பதிவு நடைபெற வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணை நடைபெற்றது.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தேர்தல் துறையும் இணைந்து 100% வாக்கு பதிவு நடைபெற வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தி வருகின்றனர் . அதன் தொடர்ச்சியாக இன்று மாலை காரைக்கால் மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவு நடைபெற வலியுறுத்தியும் நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கைகளில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கொண்டு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்து தந்தை பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி வரை காரைக்காலில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட இளம் வாக்காளர்கள் ஒன்றிணைந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் அதிகாரி மணிகண்டன் கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இந்த தேர்தல் விழிப்புணர்வு பேரணி காரைக்கால் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது.