நாமக்கல்லில் தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பன் நினைவுதினம் அனுசரிப்பு கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி மாலை அணிவித்து மரியாதை

நாமக்கல்லில் சிலம்பொலி சு.செல்லப்பன் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி
மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
நாமக்கல்லை அடுத்த வேட்டம்பாடியில் மறைந்த தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பனுக்கு நினைவு மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு அவரது முழு உருவ சிலை நிறுவப்பட்டுள்ளது.
சிலம்பொலி செல்லப்பனின் ஆறாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார்
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன், பூங்கோதை செல்லதுரை, சிலம்பொலி செல்லப்பனின் மகன் கொங்குவேல், ஒன்றிய கழகச் செயலாளர் வி.கே.பழனிவேல், காவேரி ஸ்வீட்ஸ் வெங்கடாஜலம், சென்னை கொங்கு நண்பர்கள் சங்கத் தலைவர் ரமேஷ், பிஜேபி கல்லூரி தாளாளர் கணபதி, செல்வராஜ், நாமக்கல் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பா.கிருபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *