தேனி மாவட்டம் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் மலைக்கோயிலில் சனி பிரதோஷத்தன்று பக்தர்கள் குவிந்தனர் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் மாலை 4.30 மணிமுதல் 6.00 மணி வரை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
நந்திகேஷ்வரருக்கும் கைலாசநாதருக்கும் ஒன்பது வகையான அபிஷேகம் செய்து உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் கூட்டு வழிபாடு நடைபெற்றது வருகை தந்த பக்தர்களுக்கு கட்டளைதாரர் வத்தலக்குண்டு கமிசன் கடை ரவிச்சந்திரன் ஜெயா, கொடைக்காணல் மோகன்ராஜ் ஐஸ்வர்யா, தேனி டாக்டர் கருணாகரன் அவர்கள் சார்பாக பிரசாதங்கள் வழங்கபட்டது
ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் வி.ப.ஜெயபிரதீப் செயலாளர் ” க.சிவகுமார் பொருளாளர் விஜயராணி மற்றும் குழு உறுப்பினர்கள் செய்துள்ளார்கள்