புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வைத்திலிங்கம் அவர்களை ஆதரித்து, புதுச்சேரி மாநில திமுக சார்பில், அதன் அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக இன்று காலை இந்திரா நகர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக அத்தொகுதிக்கு உட்பட்ட தர்மாபுரி பகுதியில் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் கடை வீதிகளில் வியாபாரிகளிடமும், வீடு, வீடாக சென்று ஒன்றிய பாஜக–வின் மக்கள் விரோத செயல்களை எடுத்துச் சொல்லி கை சின்னித்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

பிரச்சாரத்தின்போது இந்திரா நகர் தொகுதி திமுக தேர்தல் பொறுப்பாளர் காந்தி, தொகுதி செயலாளர் ராதாகிருஷ்ணன், அவைத்தலைவர் கோதண்டராமன், பொருளாளர் பிரபு, சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர் கார்த்திக், துணை செயலாளர் சுப்பிரமணியன், பிரதிநிதிகள் தேவநாதன், ஜெகநாதன், செயற்குழு உறுப்பினர்கள் செல்லதுரை, ஜெகதீசன், பூபாலன், ராஜ்குமார், ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சி இந்திரா நகர் பொறுப்பாளர் ராஜ்குமார், பாண்டிச்சேரி காங்கிரஸ் கமிட்டி ராஜசேகர், வட்டாரத் தலைவர் மோகன், சிறப்பு அழைப்பாளர் குணசாலி, மகளிர் அணி ஜெயக்குமாரி, அலமேலு, சாந்தி, இளைஞர் அணி கங்காதரன், முத்து, மக்கள் நீதி மையம் பட்ரோஸ், கம்யூனிஸ்ட் கட்சி கண்ணன், சீனிவாசன் உள்ளிட்ட பலர் உடனிருந்து வாக்கு சேகரித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *