தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு வரும் ஏப்ரல் 19 ந்தேதி நடைபெற உள்ளது.. கோவை நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியின் வேட்பாளராக தி.மு.க.வேட்பாளர் கணபதி ராஜ்குமார் போட்டியிடுகிறார்.இவரை ஆதரித்து பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் ஞாயிற்றுகிழமை கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு வெளியில் வரும் கிறிஸ்தவர்களிடையே தி.மு.க.வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி உதய சூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தொடர்ந்து ஆலயத்தின் பேராயரை சந்தித்து இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க ஆதரவு கோரினார்..
இரத்தினபுரி நேரு நகர் பகுதியில் உள்ள புனித சின்னப்பர் ஆலயத்தில் நடைபெற்ற இந்த வாக்கு சேகரிப்பின் போது .47 வது வார்டு செயலாளர் செல்வமணி,பல் சமய நல்லுறவு இயக்க நிர்வாகிகள் அபுதாகிர், கே யு அபுதாஹிர் சீனிவாசன் முகமது அலி டோமினிக் அலெக்ஸ் ஆனந்தகுமார் குட்டிஏசுராஜ் ஹென்றி சந்திரசேகர் காப்பேஸ்வரன் ராபர்ட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *