ஜே .சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்.

நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குசாவடி மையங்களுக்கு அனுப்பபடவுள்ள தேவையான ஆவணங்கள் எழுதுப்பொருள்கள் உள்ளிட்ட உபகரணங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ பார்வையிட்டார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குசாவடி மையங்களுக்கு அனுப்பபடவுள்ள தேவையான ஆவணங்கள் எழுதுப்பொருள்கள் உள்ளிட்ட உபகரணங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ பார்வையிட்டார்

பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் எதிர்வரும் 19.4.2024 ஆகும் திருவாரூர் மாவட்டத்தில் 166.திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி 167.மன்னார்குடி சட்டமன்ற தொகுதி 168.திருவாரூர் சட்டமன்ற தொகுதி, 169.நன்னிலம் சட்டமன்ற தொகுதி என நான்கு சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளது திருத்துறைப்பூண்டி திருவாரூர் நன்னிலம் மன்னார்குடி என நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 509758 ஆண் வாக்காளர்களும் 535117 பெண் வாக்காளர்களும் 65 மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளனர்.

166.திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு வாக்குப்பதிவு அலுவலர் வாக்குப்பதிவு அலுவலர்-1 வாக்குப்பதிவு அலுவலர்-2 வாக்குப்பதிவு அலுவலர்-4 என 1340 அலுவலர்களும் 167.மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்கு வாக்குப்பதிவு அலுவலர் வாக்குப்பதிவு அலுவலர்-1 வாக்குப்பதிவு அலுவலர்-2, வாக்குப்பதிவு அலுவலர்-4 என 1394 அலுவலர்களும், 168.திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு வாக்குப்பதிவு அலுவலர் வாக்குப்பதிவு அலுவலர்-1 வாக்குப்பதிவு அலுவலர்-2 வாக்குப்பதிவு அலுவலர்-4. என 1526 அலுவலர்களும் 169.நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு வாக்குப்பதிவு அலுவலர் வாக்குப்பதிவு அலுவலர்-1 வாக்குப்பதிவு அலுவலர்-2 வாக்குப்பதிவு அலுவலர்-4 என 1541 அலுவலர்களும் என மொத்தம் 5801 அலுவலர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

இன்றைய தினம் (17.04.2024) நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு ஸ்டாப் பேட், தீப்பெட்டி எழுதுப்பொருட்கள், பசை வெற்று தாள் குண்டூசி உள்ளிட்டு வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப் படவுள்ள பொருட்கள் சரியான எண்ணளவிலும் ஆவணங்கள் உள்ளிட்டவை வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பபடவுள்ள தனை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ பார்வையிட்டார்
நிகழ்வில் வட்டாட்சியர் (நன்னிலம்;) குருமூர்த்தி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *