மதுரை:நாளை நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலின் போது பொது மக்கள் அனைவரும் வாக்கு அளிக்கும் வகையில் தமிழக அரசு பொது விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
அதுசமயம் தனியார் அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.அத்துடன் அணைத்து மாவட்ட ஆட்சியர்களும் கண்காணிக்கும் படியும் தெரிவிக்கப்பட்டது.
இன்நிலையில் மதுரை தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று ஒரு தகவல் வந்ததாகவும்.மதுரை மாவட்டம் விருதுநகர் தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் கப்பலூர் அரியலட்சுமி ரப்பர் இண்டஸ்ட்ரிஸிஸ் நாளை 19 ம் தேதி அன்று வாக்களிக்க விடுப்பு வழங்காமல் பணிக்கு வரச்சொல்வதாக புகார் வந்துள்ளது.
உடனே புகார் சம்மந்தமாக தேர்தல் பறக்கும்படை அங்கு சென்று கம்பெனி நிர்வாக த்திடம் நடத்திய பேச்சுவார்தை மூலம் நாளை நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் வகையில் பணியாளர்களுக்கு விடுப்பு வழங்குதாக நிர்வாகத்தினர் ஒப்புக்கொண்டதாக பறக்கும் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.