சென்னை சைதாப்பேட்டையில் அரசுக்கு சொந்தமான துணை மேயர் அலுவலகம் அருகே இயற்கை உரம் தயாரிக்கும் இடத்தில் தீ விபத்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள்

சென்னை அடுத்த சைதாப்பேட்டை மெட்ரோ பின்புறம் அமைந்துள்ள துணை மேயர் அலுவலகம் அருகே இயற்கை உரம் தயாரிக்கும் நிலையம் இயங்கி வருகிறது.

இங்கு திடீரென கரும்புகை வர தொடங்கின புகை வந்த சிறிது நேரத்தில் திடீரென தீ பற்றி கொண்டு எரிய தொடங்கின.

இதனை அடுத்து அங்குள்ளவர்கள் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மெட்ரோ வாட்டர் லாரியில் உள்ள தண்ணீர் மூலம் அணைக்க தொடங்கினர்.

ஆனால் தீ கட்டுக்குள் வராததால் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது
இதனைத் தொடர்ந்து கிண்டி பகுதியில் இருந்து வந்த தீயணைப்புத் துறையினர் நெருப்பை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெப்பத்தின் காரணத்தால் தீப்பிடித்ததா இல்லை சமூக விரோதிகள் யாரேனும் தீ வைத்தார்களா என போலீசார் விசாரணை செய்து கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *